வெளியிட்டவர்
வயது - 71
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Münsingen Bern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தில்லையம்பலம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தையல்அம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, கபிலன், கவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபைதரன், சிவதர்சினி ஆகியோரின் மாமனாரும்,
பீஷ்மன், அபிராமி, அஷ்வினி, ஹரிணி, அனுஷ்கா ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, திருஞானம், குமரேசன் மற்றும் சியாமளாவல்லி(கனடா), காலஞ்சென்ற யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, கமலம், லலிதா தேவி, சண்முகநாதன் நவரத்தினராசா, மற்றும் பரமேஸ்வரி, சாந்தா, அருள், கௌரி, கௌசல்யா ஆகியோரின் மைத்துனரும்,
நடராசா, காலஞ்சென்ற திருச்செல்வம், மற்றும் ரஜனி, சிவகுமார், ரஞ்சிதமலர் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அவரது இழப்பால் வேதனையடைந்துள்ள உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும்,
அவரது ஆன்மா சாந்தியடைய இருகரம் கூப்பி பிரார்த்திக்கின்றோம்.
இவ்வறிவித்தலை RIP Page-இன் வாயிலாக அனைவரும் ஏற்றுக்கொண்டு,அவரது நினைவாக ஒரு நிமிட மெளன அஞ்சலியளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :-குடும்பத்தினர்
Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.